“அரசு நலத் திட்டங்களால் தொழிலாளர்களே கிடைப்பதில்லை!” - எல் அண்ட் டி சுப்ரமணியன் சர்ச்சை கருத்து
‘அரசு நலத் திட்டங்களால் கட்டுமானத் தொழிலாளர்கள் புலம்பெயர்ந்து வேலை செய்யத் தயாராக இல்லை’ என எல் அண்ட் டி நிறுவனத் தலைவர் எஸ்.என்.சுப்ரமணியன் பேசியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

‘அரசு நலத் திட்டங்களால் கட்டுமானத் தொழிலாளர்கள் புலம்பெயர்ந்து வேலை செய்யத் தயாராக இல்லை’ என எல் அண்ட் டி நிறுவன தலைவர் எஸ்.என்.சுப்ரமணியன் பேசியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
சென்னையில் செவ்வாய்க்கிழமை நடந்த சிஐஐ கூட்டமைப்பின் சார்பில் நடந்த உச்சி மாநாட்டில் உரையாற்றிய எஸ்.என்.சுப்ரமணியன், “எல் அண்ட் டி நிறுவனத்தில் 2.5 லட்சம் ஊழியர்கள், சுமார் 4 லட்சம் கட்டுமானத் தொழிலாளர்கள் பணி புரிகின்றனர். என் நிறுவனத்திலிருந்து சில ஊழியர்கள் விலகிச் செல்லலாம். சிலர் பணியிழக்கலாம். அவையெல்லாம் எனக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால் சமீபகாலமாக கட்டுமானத் தொழிலாளர்கள் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல் வருத்தமளிக்கிறது.
What's Your Reaction?