8 டன் இறைச்சி, 50,000 பேருக்கு உணவு - ஓசூர் அருகே கோயில் திருவிழாவில் விருந்து!
ஓசூர் அருகே 18 ஆண்டுகளுக்குப் பின்னர் நடந்த கரகதம்மாள் தேவி கோயில் திருவிழாவில் பக்தர்களுக்கு அசைவ மற்று சைவ விருந்து உபசரிப்பு நடந்தது. இதில் 8 டன் இறைச்சியில் தயாரான உணவு வழங்கப்பட்டது

ஓசூர் அருகே 18 ஆண்டுகளுக்குப் பின்னர் நடந்த கரகதம்மாள் தேவி கோயில் திருவிழாவில் பக்தர்களுக்கு அசைவ மற்று சைவ விருந்து உபசரிப்பு நடந்தது. இதில் 8 டன் இறைச்சியில் தயாரான உணவு வழங்கப்பட்டது.
ஓசூர் அருகே நல்லூர் கிராமத்தில் உள்ள கரகதம்மாள் தேவி கோயிலில் கடந்த 18 ஆண்டுகளுக்குப் பின்னர் திருவிழா வெகு விமரிசையாக தொடங்கி கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது. திருவிழாவில் தினசரி அம்மனுக்குச் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடைபெற்றன. மேலும், கரகம் எடுத்தல், கூழ் ஊற்றுதல், மாவிளக்கு எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
What's Your Reaction?