500 ஆவின் பாலகங்கள் முதல் கால்நடை பராமரிப்பு கடன் வரை - பால்வளத் துறையின் முக்கிய அறிவிப்புகள்
ஆவின் விற்பனை முகவர்களின் நலன் கருதி அவர்களின் பங்களிப்புடன் “ஆவின் விற்பனை முகவர்கள் நல நிதி” உருவாக்கப்படும் என்று பேரவையில் பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவித்தார்.

சென்னை: ஆவின் விற்பனை முகவர்களின் நலன் கருதி அவர்களின் பங்களிப்புடன் “ஆவின் விற்பனை முகவர்கள் நல நிதி” உருவாக்கப்படும் என்று பேரவையில் பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவித்தார். சட்டப்பேரவையில் பால்வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் பேசினர். அதற்கு பதிலளித்து பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசி, புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
> ரூபாய் 9.34 கோடி மதிப்பீட்டில் பால் உற்பத்தியாளர்கள் வழங்கும் பாலின் தரத்தினை மதிப்பீடு செய்து உடனுக்குடன் ஒப்புகைச்சீட்டு வழங்கி கண்காணிக்க ஏதுவாக 1437 கிளவுட் பால் பகுப்பாய்வு கருவிகள் நிறுவப்படும்.
What's Your Reaction?