41 நாட்கள் தொடர் வழிபாட்டுக்கு பிறகு சபரிமலையில் மண்டல பூஜை நிறைவு
சபரிமலை ஐயப்பன் கோயிலில் 41 நாட்கள் தொடர் வழிபாட்டுக்கு பிறகு, நேற்று மண்டல பூஜை விமரிசையாக நடைபெற்றது. நேற்று இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்பட்ட நிலையில், மீண்டும் மகரவிளக்கு பூஜைக்காக வரும் 30-ம் தேதி நடை திறக்கப்பட உள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 41 நாட்கள் தொடர் வழிபாட்டுக்கு பிறகு, நேற்று மண்டல பூஜை விமரிசையாக நடைபெற்றது. நேற்று இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்பட்ட நிலையில், மீண்டும் மகரவிளக்கு பூஜைக்காக வரும் 30-ம் தேதி நடை திறக்கப்பட உள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த மாதம் 16-ம் தேதி முதல் மண்டல கால பூஜை தொடங்கியது. தினமும் அதிகாலை 3 முதல் இரவு 11 மணிவரை பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. முக்கிய நிகழ்வான மண்டல பூஜையின்போது ஐயப்ப சுவாமிக்கு 420 பவுன் கொண்ட தங்க அங்கி அணிவித்து வழிபாடு நடைபெறும். இதற்காக ஆரன்முலா பார்த்தசாரதி கோயிலின் காப்பறையில் இருந்த தங்க அங்கி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, கடந்த 25-ம் தேதி மாலை பம்பையை வந்தடைந்தது. அங்கு சிறப்பு பூஜைகளுக்கு பிறகு, சந்நிதானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
What's Your Reaction?