38-வது தேசிய விளையாட்டு போட்டி டேராடூனில் இன்று தொடங்குகிறது

உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் 38-வது தேசிய விளையாட்டு போட்டி இன்று (28-ம்தேதி) தொடங்குகிறது.

Jan 28, 2025 - 08:15
 0  4
38-வது தேசிய விளையாட்டு போட்டி டேராடூனில் இன்று தொடங்குகிறது

டேராடூன்: உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் 38-வது தேசிய விளையாட்டு போட்டி இன்று (28-ம்தேதி) தொடங்குகிறது. வரும் பிப்ரவரி 14-ம் தேதிவரை நடைபெறும் இந்த விளையாட்டில் 32 பிரிவுகளில் போட்டிகளில் நடைபெறுகின்றன. இதில் தமிழகத்தில் இருந்து 391 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.

டேராடூனில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைக்கிறார். டேராடூன், ஹரித்வார், நைனிடால், ஹல்த்வானி, ருத்ராபூர், சிவபுரி, நியூ தெஹ்ரி ஆகிய 7 மையங்களில் 18 நாட்கள் நடைபெறும் இந்த விளையாட்டில் 38 அணிகளைச் சேர்ந்த10 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow