பணம் எங்கே? | கதை

கடையில் பண்டிகைக் கால விற்பனை முடிந்தது. மகிழ்ச்சியாக வீட்டுக்குத் தன் இருசக்கர வண்டியில் சென்று கொண்டிருந்தார் வரதன். இரவு நேரம். பணம் அதிகமாக இருந்ததால், பத்திரமாக வீடு திரும்ப வேண்டுமே என்கிற கவலை வரதனை வாட்டியது.

Oct 29, 2025 - 14:00
 0  3
பணம் எங்கே? | கதை

கடையில் பண்டிகைக் கால விற்பனை முடிந்தது. மகிழ்ச்சியாக வீட்டுக்குத் தன் இருசக்கர வண்டியில் சென்று கொண்டிருந்தார் வரதன். இரவு நேரம். பணம் அதிகமாக இருந்ததால், பத்திரமாக வீடு திரும்ப வேண்டுமே என்கிற கவலை வரதனை வாட்டியது. அப்போது திடீரென்று பெய்த மழையால் பயணம் தடைப்பட்டது.

அருகே இருந்த விடுதி ஒன்றில் அறை எடுத்துத் தங்கினார். அது இருவர் தங்கும் அறை. ஏற்கெனவே அங்கே இருந்த ராமு, வரதனையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார். வரதனுக்குப் பயமாக இருந்தது. பணத்தைப் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow