கர்ப்ப கால உயர் ரத்த அழுத்த நோயை கண்டறியும் புதிய உயிரி பயோசென்சார் தளம் உருவாக்கம் - சென்னை ஐஐடி தகவல்
சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் தலைமையில் பல்வேறு கல்வி நிறுவன ஆராய்ச்சிக் குழுவினர், கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் கர்ப்பகால உயர் ரத்த அழுத்த நோயைக் கண்டறியக்கூடிய புதிய பயோசென்சார் தளத்தை உருவாக்கியுள்ளனர்.

சென்னை: சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் தலைமையில் பல்வேறு கல்வி நிறுவன ஆராய்ச்சிக் குழுவினர், கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் கர்ப்ப கால உயர் ரத்த அழுத்த நோயைக் கண்டறியக்கூடிய புதிய பயோசென்சார் தளத்தை உருவாக்கியுள்ளனர்.
இது தொடர்பாக சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் தலைமையில் பல்வேறு கல்வி நிறுவன ஆராய்ச்சிக் குழுவினர், கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் கர்ப்பகால உயர் ரத்த அழுத்த நோயைக் கண்டறியக்கூடிய புதிய பயோசென்சார் தளத்தை உருவாக்கியுள்ளனர். தற்போதுள்ள தொழில்நுட்பங்களுக்கு சாத்தியமுள்ள மாற்றாக, ஃபைபர் ஆப்டிக்ஸ் சென்சார் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, நோயாளியை பரிசோதனை செய்து கண்டறியும் உத்தியை உருவாக்க ஒன்றிணைந்துள்ளனர்.
What's Your Reaction?