ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சியில் ‘பெரியவா - சீசன் இரண்டு’, ‘மஹர்ஷி’ தொடர்கள்: டிசம்பர் மாதம் முதல் ஒளிபரப்பாகின்றன
ரீ சங்கரா தொலைக்காட்சியில் ‘பெரியவா - சீசன் இரண்டு’, மகான் ரமண மகரிஷி பற்றிய ‘மஹர்ஷி’ ஆகிய தொடர்கள் டிசம்பர் மாதம் முதல் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளன.

சென்னை: ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சியில் ‘பெரியவா - சீசன் இரண்டு’, மகான் ரமண மகரிஷி பற்றிய ‘மஹர்ஷி’ ஆகிய தொடர்கள் டிசம்பர் மாதம் முதல் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளன. ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சியில் ‘பெரியவா - சீசன் இரண்டு’, மகான் ரமண மகரிஷி பற்றிய ‘மஹர்ஷி’ ஆகிய தொடர்கள் ஒளிப்பரப்பு செய்யப்பட உள்ளன. இதற்கான போஸ்டர் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. இதை ‘துக்ளக்’ ஆசிரியர் குருமூர்த்தி வெளியிட்டார்.
விழாவில், இரு தொடர்களையும் தயாரித்த இயக்குநர் சாணக்யா உரையாற்றும்போது, “கடந்த வருடம் மகான் காஞ்சி பெரியவர் பற்றிய தொடர் ஒளிபரப்பப்பட்டது. அதற்கு மக்கள் கொடுத்த ஆதரவை தொடர்ந்து தற்போது ‘பெரியவா - சீசன் இரண்டு’, மஹான் ரமண மகரிஷிபற்றிய ‘மஹர்ஷி’ ஆகிய தொடர்கள் தயாரிக்கப்பட்டு ஒளிபரப்பு செய்யப்பட உள்ளன.
What's Your Reaction?