‘இன்போசிஸ்’ நாராயணமூர்த்தி யோசனை: பின்நோக்கி இழுப்பது நியாயமா?

இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் நாராயணமூர்த்தி, இளைஞர்கள் வாரத்துக்கு 70 மணி நேரம் உழைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Nov 19, 2024 - 08:35
 0  3
‘இன்போசிஸ்’ நாராயணமூர்த்தி யோசனை: பின்நோக்கி இழுப்பது நியாயமா?

இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் நாராயணமூர்த்தி, இளைஞர்கள் வாரத்துக்கு 70 மணி நேரம் உழைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அவரது கருத்து நாடு முழுவதும் இளைஞர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை உருவாக்கி உள்ளது. “நான் காலை 6.20 மணி முதல் இரவு 8.30 மணி வரை பணியாற்றுவேன். அதுபோல உழைத்தால்தான் இந்தியா முன்னேறும். தற்போது உலக அளவில் இந்தியாவின் உற்பத்தி குறியீடு பின்தங்கி உள்ளது. அதேபோல், நாட்டில் நிலவும் ஊழல், அதிகார வர்க்கம் கடமையாற்றுவதில் உள்ள தாமதம் ஆகியவை மாறினால் மட்டுமே இந்தியா வேகமான வளர்ச்சியை எட்ட முடியும்” என்றும் நாராயணமூர்த்தி கூறியுள்ளார்.

மன்னர்கள் ஆண்டபோது நாட்டு மக்களை அடிமைகளாக பிடித்துச் சென்று சங்கிலியால் கட்டிவைத்து, சாப்பாடு மட்டுமே கொடுத்து பெரிய அரண்மனை, கோட்டை, மாடமாளிகைகளை கட்டச் செய்தனர். அங்கு ஆரம்பித்ததுதான் உழைக்கும் வர்க்கம். வெள்ளையர்கள் ஆண்டபோது அவர்களுக்கு அடிபணியாதவர்களை சிறைபிடித்து, கப்பலில் ஏற்றிச் சென்று மலேசியா, பர்மா, இலங்கை, அந்தமான் போன்ற தீவுகளில் இறக்கிவிட்டு தோட்ட வேலைகளில் ஈடுபடச் செய்தனர். உழைக்கும் வர்க்கத்தினர் உலகம் முழுக்க தங்கள் உரிமைகளுக்காக குரல் கொடுத்த பின்னர் 19-ம் நூற்றாண்டில் 8 மணி நேர உழைப்பு உருவானது. கம்யூனிஸ சிந்தாந்தங்களின் வளர்ச்சி காரணமாக, தொழிலாளர் யூனியன், தொழிலாளர் வைப்பு நிதி, போனஸ், மருத்துவக் காப்பீடு, குடும்ப பாதுகாப்பு என போராடிப் பெற்ற உரிமைகள் தற்போது தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow