வேம்பத்தூர் சுந்தரராஜ பெருமாள் கோயிலில் மந்திர விபூதி!
நம்பியோருக்கு நலமே நல்கும் வேம்பத்தூரிலுள்ள பூமிநீளா சமேத சுந்தரராஜ பெருமாள் கோயிலில் பக்தர்களின் தேக ஆரோக்கியத்துக்கு விபூதி வழங்கப்படுகிறது.

நம்பியோருக்கு நலமே நல்கும் வேம்பத்தூரிலுள்ள பூமிநீளா சமேத சுந்தரராஜ பெருமாள் கோயிலில் பக்தர்களின் தேக ஆரோக்கியத்துக்கு விபூதி வழங்கப்படுகிறது.
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியிலிருந்து 8 கி.மீ. தொலைவிலுள்ள வேம்பத் தூரில் பூமிநீளா சமேத சுந்தரராஜ பெருமாள் கோயில் அமைந்துள்ளது. மதுரையை ஆண்ட குலசேகர பாண்டிய மன்னனால் கட்டப்பட்டது. இதனால், இவ்வூருக்கு குலசேகர சதுர்வேதி மங்கலம் என்ற பெயரும் உண்டு. சிற்ப சாஸ்திர காலத்துக்கு முன்பே கல்லையே உளியாகக் கொண்டு வடிக்கப்பட்ட மூலவர் சிலை உள்ளது.
What's Your Reaction?