வீட்டில் துன்புறுத்துகிறார்கள்: நடிகை தனுஸ்ரீ தத்தா கண்ணீர்

என் சொந்தவீட்டிலேயே நான் துன்புறுத்தப்படு கிறேன். அதை தாங்க முடியாமல் போலீஸாருக்கு போன் செய்தேன். அவர்கள் முறையான புகார் அளிக்கச் சொல்லி இருக்கிறார்கள். நான் அளிக்க இருக்கிறேன்

Jul 24, 2025 - 11:25
 0  4
வீட்டில் துன்புறுத்துகிறார்கள்: நடிகை தனுஸ்ரீ தத்தா கண்ணீர்

தமிழில் விஷாலின் ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’ படத்தில் நடித்தவர் நடிகை தனுஸ்ரீ தத்தா. இவர் இந்தியில், ‘ஹார்ன் ஓகே
ப்ளீஸ்’, ‘ஆஷிக் பனாயா அப்னே’ உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன், இந்தி நடிகர் நானா படேகர் மீது கூறிய ‘மீ டூ’ புகார் பரபரப்பாகி இருந்தது. இதுதொடர்பாக இருவரும் மாறி மாறி வழக்குத் தொடுத்தனர். இந்நிலையில், தனுஸ்ரீ தத்தா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கண்ணீர் மல்க இரண்டு வீடியோவை பகிர்ந்துள்ளார்.

அதில் அவர், "என் சொந்தவீட்டிலேயே நான் துன்புறுத்தப்படு கிறேன். அதை தாங்க முடியாமல் போலீஸாருக்கு போன் செய்தேன். அவர்கள் முறையான புகார் அளிக்கச் சொல்லி இருக்கிறார்கள். நான் அளிக்க இருக்கிறேன். கடந்த 4-5 வருடங்களாக நான் சித்தரவதையை அனுபவித்து வருவதால் அது என் உடல்நிலையை பாதித்துள்ளது. என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. என் வீட்டிலேயே எனக்கு நிம்மதி இல்லை. வீட்டில் வேலைக்குக் கூட ஆட்களை நியமிக்க முடியவில்லை.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow