“விஜய் அழைத்தாலும் தவெகவில் சேரமாட்டேன்” - நடிகர் பார்த்திபன்

புதுச்சேரியில் படப்பிடிப்பு நடத்துவது சம்பந்தமாக நடிகரும், இயக்குநருமான பார்த்திபன், புதுச்சேரி சட்டப்பேரவையில் பொதுப்பணி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணனை இன்று நேரில் சந்தித்து பேசினார்.

Jan 29, 2025 - 20:50
 0  5
“விஜய் அழைத்தாலும் தவெகவில் சேரமாட்டேன்” - நடிகர் பார்த்திபன்

புதுச்சேரி: புதுச்சேரியில் படப்பிடிப்பு நடத்துவது தொடர்பாக நடிகரும், இயக்குநருமான பார்த்திபன், புதுச்சேரி சட்டப்பேரவையில் பொதுப் பணி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணனை இன்று நேரில் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “நான் புதிதாக ‘‘54-வது பக்கத்தில் ஒரு மயிலிறகு’’ எனும் திரைப்படத்தை தயாரிக்க உள்ளேன்.

இதன் படப்பிடிப்பு 99 சதவீதம் புதுச்சேரியில் நடைபெறவுள்ளதால் அரசின் ஒத்துழைப்பைக் கோரி சுற்றுலாத் துறை அமைச்சரைச் சந்தித்தேன். அவர் கனிவோடு ஏற்றுக்கொண்டு புதுச்சேரி அரசு மூலம் என்ன செய்து தர முடியுமோ, அதனை செய்து தருவதாக கூறியுள்ளார். என்னுடைய படத்தில் எப்போதும் கதாநாயகன் நான் தான். இது காதலை மையமாக கொண்ட திரைப்படம்” என்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow