வருகிறார் அடுத்த ரிஷப் பண்ட்! - யார் இந்த ஹர்வன்ஷ் சிங் பங்காலியா?

இந்தியா யு-19 வீரர், சவுராஷ்டிராவைச் சேர்ந்த ஹர்வன்ஷ் சிங் பங்காலியா அடுத்த ரிஷப் பண்ட் என்று பேசப்பட்டு வருகிறார்.  இவரும் விக்கெட் கீப்பர்/பேட்டர்தான் ஆனால், இவர் இங்கிலாந்து யு-19 அணிக்கு எதிரான வார்ம் அப் போட்டியில் 52 பந்துகளில் 103 ரன்களை விளாசி நாட் அவுட்டாகத்  திகழ்ந்தார்.

Jun 27, 2025 - 15:10
 0  4
வருகிறார் அடுத்த ரிஷப் பண்ட்! - யார் இந்த ஹர்வன்ஷ் சிங் பங்காலியா?

இந்தியா யு-19 வீரர், சவுராஷ்டிராவைச் சேர்ந்த ஹர்வன்ஷ் சிங் பங்காலியா அடுத்த ரிஷப் பண்ட் என்று பேசப்பட்டு வருகிறார். இவரும் விக்கெட் கீப்பர்/பேட்டர்தான் ஆனால், இவர் இங்கிலாந்து யு-19 அணிக்கு எதிரான வார்ம் அப் போட்டியில் 52 பந்துகளில் 103 ரன்களை விளாசி நாட் அவுட்டாகத் திகழ்ந்தார்.

ஹர்வன்ஷ் இறங்கும் போது இந்தியா யு-19 அணி 7 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்கள் எடுத்திருந்தது. ஹர்வன்ஷ் சிங்குடன் அப்போது ஆர்.எஸ்.அம்பிரீஷ் என்ற இளம் வீரர் கிரீசில் இருந்தார், இருவரும் சேர்ந்து 126 ரன்கள் கூட்டணி அமைத்தனர்.. அம்பிரீஷும் அதிரடி முறையில் 47 பந்துகளில் 72 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார். அப்போது ஹர்வன்ஷ் சிங் பங்காலியா 33 பந்துகளில் 47 ரன்களில் இருந்தார். ஒரு பவுண்டரி மூலம் அரைசதம் கண்ட இவர் அதன் பிறகு பேயாட்டம் ஆடிவிட்டார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow