வங்கதேசத்தில் 3 கோயில்கள் மீது தாக்குதல்: இஸ்கான் அமைப்​பினர் உட்பட 17 பேரின் வங்கி கணக்​குகள் முடக்கம்

வங்​கதேசத்​தில் மேலும் 3 கோயில்கள் மீது வன்முறை கும்பல் தாக்​குதல் நடத்தியுள்ளது. இஸ்கான் அமைப்பினர் உட்பட 17 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன

Dec 1, 2024 - 05:05
 0  4
வங்கதேசத்தில் 3 கோயில்கள் மீது தாக்குதல்: இஸ்கான் அமைப்​பினர் உட்பட 17 பேரின் வங்கி கணக்​குகள் முடக்கம்

தாகா / நாக்பூர்: வங்​கதேசத்​தில் மேலும் 3 கோயில்கள் மீது வன்முறை கும்பல் தாக்​குதல் நடத்தியுள்ளது. இஸ்கான் அமைப்பினர் உட்பட 17 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இஸ்கான் முன்னாள் தலைவர் சின்மோய் கிருஷ்ண தாஸ் தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை பார்க்கசென்ற இன்னொரு பூசாரி கைதுசெய்யப்பட்டுள்ளார். இது இந்துக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

வங்கதேசத்​தில் பழைய இடஒதுக்​கீடு முறை தொடர்பாக மாணவர்கள் நடத்திய போராட்டம் பெரும் வன்முறையாக மாறியது. இதில் பலர் உயிரிழந்தனர். பிரதமர் பதவியை ராஜினாமாசெய்த ஷேக் ஹசீனா, இந்தியா​வில் தஞ்சம் அடைந்​துள்ளார். தற்போது வங்கதேசத்​தில் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்​துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow