‘லியோ’ படத்துக்கு தடை விதிக்க கோரிய மனு தள்ளுபடி
வன்முறை காட்சிகள் அதிகம் இருப்பதால் ‘லியோ’ படத்துக்கு தடை விதிக்க கோரி தக்கலான மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மதுரை: வன்முறை காட்சிகள் அதிகம் இருப்பதால் ‘லியோ’ படத்துக்கு தடை விதிக்க கோரி தக்கலான மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மதுரையை சேர்ந்த ராஜமுருகன், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், நடிகர் விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கிய படம் லியோ. த்ரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், கவுதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்த இப்படம் கடந்த 2024 அக்டோபர் 19-ம் தேதி வெளியானது. இப்படத்தில் பெரும்பாலான காட்சிகள் வன்முறையை ஆதரிக்கும் வகையில் உள்ளது. துப்பாக்கி, கத்தி, இரும்பு கம்பிகளும், வீட்டிலேயே துப்பாக்கி மற்றும் வெடிபொருட்களை தயாரிப்பது பற்றியும் காட்சிகள் உள்ளன.
What's Your Reaction?