ரஷ்ய தாக்குதலில் உயிரிழந்தவர்கள் திரும்ப மாட்டார்கள்: உக்ரைன் பிரதமர் யுலியா சிவிர்​டென்கோ வேதனை

ரஷ்ய தாக்​குதலில் நொறுங்​கிய கட்​டிடங்​களை கட்​டி​விடு​வோம். ஆனால், உயி​ரிழந்​தவர்​களை திரும்ப வரு​வார்​களா?’’ என்று உக்​ரைன் பிரதமர் யுலியா சிவிர்​டென்கோ தெரி​வித்​தார்.

Sep 8, 2025 - 07:45
 0  3
ரஷ்ய தாக்குதலில் உயிரிழந்தவர்கள் திரும்ப மாட்டார்கள்: உக்ரைன் பிரதமர் யுலியா சிவிர்​டென்கோ வேதனை

கீவ்: ‘‘ரஷ்ய தாக்​குதலில் நொறுங்​கிய கட்​டிடங்​களை கட்​டி​விடு​வோம். ஆனால், உயி​ரிழந்​தவர்​களை திரும்ப வரு​வார்​களா?’’ என்று உக்​ரைன் பிரதமர் யுலியா சிவிர்​டென்கோ தெரி​வித்​தார்.

அமெரிக்கா தலை​மையி​லான நேட்டோ ராணுவ படை​யில் சேர உக்​ரைன் திட்​ட​மிட்​டது. இதற்கு எதிர்ப்பு தெரி​வித்து உக்​ரைன் மீது ரஷ்யா தாக்​குதல் நடத்தி வரு​கிறது. கடந்த 3 ஆண்​டு​களுக்கு மேல் இருதரப்​புக்​கும் இடை​யில் மோதல் நீடிக்​கிறது. இந்​நிலை​யில், உக்​ரைன் தலைநகர் கீவ் நகரில் ரஷ்யா நேற்று மிகப்​பெரிய வான்​வழித் தாக்​குதல் நடத்​தி​யது. இதில் தாய், 3 மாத குழந்தை உயி​ரிழந்​தனர். மேலும், 17 பேர் காயம் அடைந்​தனர். கீவ் நகரில் உள்ள கேபினட் அமைச்​சர்​களின் கட்​டிடத்​தின் மீது ரஷ்ய ட்ரோன்​கள் மற்​றும் ஏவு​கணை​கள் நேற்று தாக்​குதல் நடத்​தின. இதில் கட்​டிடத்​தின் மேல் தளங்​கள் தீப்​பற்றி எரிந்​தன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow