ரயில் புறப்படுவதற்கு 8 மணி நேரம் முன்பு முன்பதிவு அட்டவணை வெளியீடு
ரயில்கள் புறப்படுவதற்கு 4 மணி நேரத்துக்கு முன்பு தற்போது முன்பதிவு அட்டவணை வெளியிடப்படுகிறது.

சென்னை: ரயில்கள் புறப்படுவதற்கு 4 மணி நேரத்துக்கு முன்பு தற்போது முன்பதிவு அட்டவணை வெளியிடப்படுகிறது. இதனால், கடைசி நேரத்தில் பயணச்சீட்டு உறுதியாகாத நிலையில், பயணத்தை மாற்றியமைக்க பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.
இதை கருத்தில் கொண்டு, 8 மணி நேரத்துக்கு முன்பாக முன்பதிவு அட்டவணையை வெளியிட வேண்டும் என்ற ரயில்வே வாரிய பரிந்துரையை செயல்படுத்துமாறு துறையின் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உத்தரவிட்டார்.
What's Your Reaction?