ரஞ்சி கோப்பை: அரை இறுதிக்கு முன்னேறியது மும்பை, குஜராத் அணிகள்

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் கால் இறுதி ஆட்டத்தில் சவுராஷ்டிரா அணியை இன்னிங்ஸ் மற்றும் 98 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரை இறுதி சுற்றுக்கு முன்னேறியது குஜராத் அணி.

Feb 12, 2025 - 08:10
 0  6
ரஞ்சி கோப்பை: அரை இறுதிக்கு முன்னேறியது மும்பை, குஜராத் அணிகள்

ராஜ்கோட்: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் கால் இறுதி ஆட்டத்தில் சவுராஷ்டிரா அணியை இன்னிங்ஸ் மற்றும் 98 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரை இறுதி சுற்றுக்கு முன்னேறியது குஜராத் அணி.

ராஜ்கோட்டில் நடைபெற்று வந்த கால் இறுதி ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் சவுராஷ்டிரா 216 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதேவேளையில் குஜராத் அணி 511 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக உர்வில் பட்டேல் 140, ஜெய்மீட் பட்டேல் 103 ரன்கள் விளாசினர். 295 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய சவுராஷ்டிரா அணி நேற்றை 4-வது நாள் ஆட்டத்தில் 62.1 ஓவர்களில் 197 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow