தண்ணீர் பற்றாக்குறை - பெங்களூரு மைதானத்தில் மறுசுழற்சி செய்யப்பட்ட நீர் பயன்பாடு | ஐபிஎல் 2025

கோடை காலம் நெருங்கும் நிலையில் கர்நாடக மாநில தலைநகரான பெங்களூருவில் மீண்டும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் சூழல் உள்ளதாக தகவல்.

Mar 11, 2025 - 21:45
 0  3
தண்ணீர் பற்றாக்குறை - பெங்களூரு மைதானத்தில் மறுசுழற்சி செய்யப்பட்ட நீர் பயன்பாடு | ஐபிஎல் 2025

பெங்களூரு: கோடை காலம் நெருங்கும் நிலையில் கர்நாடக மாநில தலைநகரான பெங்களூருவில் மீண்டும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் சூழல் உள்ளதாக தகவல். இந்நிலையில், எதிர்வரும் 18-வது ஐபிஎல் சீசனுக்கு பெங்களூருவில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் மறுசுழற்சி செய்யப்பட்ட நீர் பயன்படுத்தப்பட உள்ளது.

ஆண்டுதோறும் ஐபிஎல் சீசன்களில் பெங்களூருவில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த மைதானம் ஐபிஎல் அணியான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கிரிக்கெட் அணியின் ஹோம் கிரவுண்டாக உள்ளது. 18-வது ஐபிஎல் சீசனில் மொத்தம் 7 போட்டிகள் பெங்களூருவில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow