யானையின் பழக்கடை | கதை
யானை ‘சர்க்கஸ்’லிருந்து களக்காடு காட்டுக்கு ஓடிவந்துவிட்டது. களக்காடு காட்டில் நிறைய விலங்குகள் இருந்தன. சிங்கம் கிடையாது. புலி இருந்தது. அதனால் அந்தக் காட்டுக்குப் புலிதான் ராஜா.

யானை ‘சர்க்கஸ்’லிருந்து களக்காடு காட்டுக்கு ஓடிவந்துவிட்டது. களக்காடு காட்டில் நிறைய விலங்குகள் இருந்தன. சிங்கம் கிடையாது. புலி இருந்தது. அதனால் அந்தக் காட்டுக்குப் புலிதான் ராஜா. யானை நகரத்தில் இருந்தபோது பழக் கடைகளைப் பார்த்திருக்கிறது. அதனால் காட்டில் ஒரு பழக்கடையை ஆரம்பிக்க விரும்பியது. தன் விருப்பத்தை மானிடம் சொன்னது.
“காட்டில் கடையா? இதென்ன வேடிக்கை!” என்று சிரித்தது மான். “நாட்டில் கடைகள் இருப்பதுபோல் காட்டில் ஏற்படுத்த நினைக்கிறேன்” என்றது யானை. “அது நாட்டுக்குச் சரி, காட்டுக்குச் சரியா? இங்கே எதுவும் யாருக்கும் சொந்தமில்லை. எல்லாமும் எல்லாருக்கும் சொந்தம்” என்றது மான். “யார் என்ன சொன்னாலும் நான் கடை ஆரம்பிப்பது உறுதி” என்றது யானை.
What's Your Reaction?