மூன்றாவது இமை | பறப்பதுவே 10
உன்னிப்பாகக் கவனிக்கும் ஒருவரை, ‘அவரின் கழுகுப் பார்வையிலிருந்து தப்பிக்க முடியாது’ என்கிறோம். ஆனால், அனைத்துப் பறவைகளும் கூர்மையான பார்வைத் திறனைக் கொண்டுள்ளன.

உன்னிப்பாகக் கவனிக்கும் ஒருவரை, ‘அவரின் கழுகுப் பார்வையிலிருந்து தப்பிக்க முடியாது’ என்கிறோம். ஆனால், அனைத்துப் பறவைகளும் கூர்மையான பார்வைத் திறனைக் கொண்டுள்ளன. பறவைகள் பறப்பதற்கும் இரையைக் கண்டறிவதற்கும் துல்லியமான பார்வை அவசியமானது. மிகப் பெரிய பறவையான நெருப்புக்கோழி பெரிய கண்களைக் கொண்டுள்ளது.
இது மனிதக்கண்களைவிட இரண்டு மடங்கு பெரியது. யானையின் கண்களுடன் ஒப்பிடும்போது 30 சதவீதம் பெரியது. ஒரு மனிதரின் எடையைப்போல் எட்டில் ஒரு பங்கு இருக்கும் கழுகு, மனிதக் கண்ணின் அளவை ஒத்த கண்களைக் கொண்டிருக்கிறது.
What's Your Reaction?