மீன் வளர்ப்பில் சத்தீஸ்கரின் பெண்கள் குழு: ஆண்டுதோறும் 15 டன் உற்பத்தி, பல லட்சம் லாபம்
சத்தீஸ்கரில் ஒரு பெண்கள் குழு ஏழு வருடங்களாக மீன் வளர்ப்பு தொழிலைச் செய்கிறது. ஆண்டுதோறும் 15 டன் மீன் உற்பத்தி செய்து பல லட்சம் ரூபாய் லாபமும் ஈட்டியுள்ளது இந்த குழு.

புதுடெல்லி: சத்தீஸ்கரில் ஒரு பெண்கள் குழு ஏழு வருடங்களாக மீன் வளர்ப்பு தொழிலைச் செய்கிறது. ஆண்டுதோறும் 15 டன் மீன் உற்பத்தி செய்து பல லட்சம் ரூபாய் லாபமும் ஈட்டியுள்ளது இந்த குழு.
இந்தியாவின் பொருளாதாரத்தில் மீன் வளர்ப்பு தொழில் கணிசமானப் பங்கு வகிக்கிறது. இதனால், சர்வதேச அளவில் இந்தியா மீன் வளர்ப்பு தொழிலில் மூன்றாம் இடம் வகிக்கிறது. எனினும், சர்வதேச மீன் உற்பத்தியில் இந்தியாவின் அளவு ஏழு சதவிகிதம் மட்டுமே. இத்தனைக்கும் இந்த தொழிலில் மட்டும் இந்தியாவின் 14 மில்லியன் பேர் ஈடுபட்டுள்ளனர்.
What's Your Reaction?