பஹல்காம் பதற்றம் எதிரொலி: சென்செக்ஸ் 1000 புள்ளிகள்; நிஃப்டி 300 புள்ளிகள் சரிவு!
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள பதற்றங்கள் முதலீட்டாளர்களின் உணர்வுகளை பாதித்துள்ளதால் வெள்ளிக்கிழமை ஆரம்ப லாபத்தையும் மீறி இந்திய பங்குச்சந்தைகள் சரிவைச் சந்தித்தன. சென்செக்ஸ் 1000 புள்ளிகளும், நிஃப்டி 300 புள்ளிகளும் சரிந்தன.

மும்பை: பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள பதற்றங்கள் முதலீட்டாளர்களின் உணர்வுகளை பாதித்துள்ளதால் வெள்ளிக்கிழமை ஆரம்ப லாபத்தையும் மீறி இந்திய பங்குச்சந்தைகள் சரிவைச் சந்தித்தன. சென்செக்ஸ் 1000 புள்ளிகளும், நிஃப்டி 300 புள்ளிகளும் சரிந்தன.
மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் தொடக்க வர்த்தகத்தில் 79,830 புள்ளிகளுடன் சற்று லாபத்துடனேயே தொடங்கின. என்றாலும் வர்த்தக நேரத்தில் 11.30 மணிக்கு 1004 புள்ளிகள் சரிந்து 78,797.39 ஆக சரிந்தது. அதேபோல் தேசிய பங்குச்சந்தையிலும் நிஃப்டி 24.289 புள்ளிகளில் தொடங்கிய நிலையில், வர்த்தகத்தின் போது 338 புள்ளிகள் சரிந்து 23,908 ஆக இருந்தது.
What's Your Reaction?