அரூர், பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் பாக்கு மரக்கன்று நடுவதில் விவசாயிகள் ஆர்வம்!

அரூர், பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் பாக்கு மரக் கன்றுகள் நடுவ தில் விவசாயிகள் ஆர்வம்  காட்டி வருகின்றனர். நடப்பாண்டில் புதிதாக சுமார் 1 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன

Sep 26, 2025 - 18:05
 0  3
அரூர், பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் பாக்கு மரக்கன்று நடுவதில் விவசாயிகள் ஆர்வம்!

அரூர், பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் பாக்கு மரக்கன்றுகள் நடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். நடப்பாண்டில் புதிதாக சுமார் 1 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன.

தருமபுரி மாவட்டத்தில் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களே பிரதானமாக உள்ளது. மாவட்டத்தில் உள்ள மொத்த பரப்பளவான 4 லட்சத்து 50 ஆயிரம் ஹெக்டேரில் 1 லட்சத்து 95 ஆயிரத்து 740 ஹெக்டேர் சாகுபடி பரப்பாக உள்ளது. குறிப்பாக அரூர், பாப்பிரெட்டிப்பட்டி பகுதி ஓரளவு நீர்வளம் மற்றும் மண்வளம் மிக்கதாக இப்பகுதி மக்கள் விவசாயத்தில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow