மீண்டும் தலைதூக்கும் ‘தஞ்சாவூர் வாடல்நோய்’ - மரங்கள் காய்ந்து கருகும் துயரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதியில் கஜா புயல் சேதம், காண்டாமிருக வண்டு தாக்குதல், வெள்ளை ஈ தாக்குதலைத் தொடர்ந்து 68 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ‘தஞ்சாவூர் வாடல் நோய்’ தாக்குதலால் தென்னை மரங்கள் சேதமடைந்து வருகின்றன

Jun 2, 2025 - 16:05
 0  5
மீண்டும் தலைதூக்கும் ‘தஞ்சாவூர் வாடல்நோய்’ - மரங்கள் காய்ந்து கருகும் துயரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதியில் கஜா புயல் சேதம், காண்டாமிருக வண்டு தாக்குதல், வெள்ளை ஈ தாக்குதலைத் தொடர்ந்து 68 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ‘தஞ்சாவூர் வாடல் நோய்’ தாக்குதலால் தென்னை மரங்கள் சேதமடைந்து வருகின்றன. இதனால் தென்னை விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

தஞ்சாவூரில் நெல் சாகுபடிக்கு நிகராக, தென்னை சாகுபடியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதிகளில் கிழக்கு கடற்கரை காற்று வீசுவதால் தென்னை மர வளர்ச்சிக் கும், மகசூலுக்கும் பெரிதும் உதவி வருவதால், பெரும்பாலான விவசாயிகள் தென்னை சாகுபடியை மேற்கொண்டு வருகின்றனர். ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய வட்டங்களில் சுமார் 50 லட்சத்துக்கும் அதிகமான தென்னை மரங்கள் உள்ளன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow