மியான்மர் பூகம்பம்: நில அதிர்வுகளால் மீட்புப் பணிகளில் சிக்கல்; பலி எண்ணிக்கை 1644 ஆக அதிகரிப்பு

மியான்மரை வெள்ளிக்கிழமை 7.7 அளவில் தாக்கிய சக்தி வாய்ந்த பூகம்பத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1644 ஆக அதிகரித்துள்ளது.  அதன் அண்டை நாடான தாய்லாந்தில் 17 பேர் உயிரிழந்திருக்கின்றனர். மாண்டலே பகுதியில் இன்று தாக்கிய பின்அதிர்வுகள் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

Mar 30, 2025 - 15:30
 0  3
மியான்மர் பூகம்பம்: நில அதிர்வுகளால் மீட்புப் பணிகளில் சிக்கல்; பலி எண்ணிக்கை 1644 ஆக அதிகரிப்பு

நேப்பிடா: மியான்மரை வெள்ளிக்கிழமை 7.7 அளவில் தாக்கிய சக்தி வாய்ந்த பூகம்பத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1644 ஆக அதிகரித்துள்ளது. அதன் அண்டை நாடான தாய்லாந்தில் 17 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மியான்மரின் மாண்டலே பகுதியில் இன்று (மார்ச் 30) தாக்கிய பின்அதிர்வுகள் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. பூகம்பத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட மாண்டலே நகரில் ஞாயிற்றுக்கிழமை தாக்கிய பின்அதிர்வுகளால் மக்கள் பீதியடைந்துள்ளனர். முதலில் லேசாக தொடங்கிய அதிர்வு பின்பு 6.7 அளவில் தீவிரமடைந்தது.அதேபோல், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,408 ஆகவும் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 139 ஆகவும் அதிகரித்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow