மிடில் ஓவர்களில் பிரமாதமாக ஆடுவது ஸ்ரேயஸ் அய்யர்தான் - ஆகாஷ் சோப்ரா

பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக கடந்த ஐபிஎல் சீசனில் மிக அருமையாக ஆடிய ஸ்ரேயஸ் அய்யர் இந்திய டி20 அணியில் மீண்டும் அழைக்கப்பட தகுதியானவரே என்று முன்னாள் தொடக்க வீரர் ஆகாஷ் சோப்ரா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். 

Aug 18, 2025 - 17:50
 0  3
மிடில் ஓவர்களில் பிரமாதமாக ஆடுவது ஸ்ரேயஸ் அய்யர்தான் - ஆகாஷ் சோப்ரா

பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக கடந்த ஐபிஎல் சீசனில் மிக அருமையாக ஆடிய ஸ்ரேயஸ் அய்யர் இந்திய டி20 அணியில் மீண்டும் அழைக்கப்பட தகுதியானவரே என்று முன்னாள் தொடக்க வீரர் ஆகாஷ் சோப்ரா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

நாளை, செவ்வாய்க் கிழமை ஆசியக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்படும் நிலையில் ஸ்ரேயஸ் அய்யர் மீண்டும் அணிக்குள் வர வேண்டும் என்று விரும்புகிறார் ஆகாஷ் சோப்ரா. மேலும் ரிக்கி பாண்டிங் பயிற்சியின் கீழ் ஓர் அற்புதமான கேப்டனாகவும் அய்யர் உருவெடுத்துள்ளார். ஐபிஎல் தொடரின் இப்போதைய சிறந்த கேப்டன் ஸ்ரேயஸ் அய்யர்தான். எனவே அணியின் உயர்மட்ட முடிவெடுக்கும் குழுவில் கேப்டனுக்கு உதவியாக ஸ்ரேயஸ் இருப்பது இந்திய அணிக்கு வலுசேர்க்கும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow