மாலும் நாலும் | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் - 11
ஸ்ரீரங்கப்பெருமானை அழகிய மணவாளனாகவே கண்டு, அவர் அடியிணையின் வடிவழகில் தோய்ந்து, பற்பல பற்பல பாடல்களைப் பாடிப் பாடி இன்புற்றவர் திருப்பாணாழ்வார். தாழ்த்தப்பட்ட குலத்தைச் சேர்ந்தவர்.

ஸ்ரீரங்கப்பெருமானை அழகிய மணவாளனாகவே கண்டு, அவர் அடியிணையின் வடிவழகில் தோய்ந்து, பற்பல பற்பல பாடல்களைப் பாடிப் பாடி இன்புற்றவர் திருப்பாணாழ்வார். தாழ்த்தப்பட்ட குலத்தைச் சேர்ந்தவர். அவருக்கு ஸ்ரீரங்கநாதனை நேரில் சென்று தரிசிக்க வேண்டும் என்று கொள்ளைப் பிரியம்.
ஆனால், தான் தாழ்த்தப்பட்டவர் என்பதால் கோயிலுக்குள்ளே அனுமதிக்கமாட்டார்கள் என்று பயம். அதனால் ஒவ்வொரு நாளும் காவிரிக்கரையில் யாழும் கையுமாக நின்று, பெருமாள் இருக்கும் திசை நோக்கித் தொழுது, மனமுருகப் பாடும் பழக்கத்தைக் கொண்டிருந்தார்.
What's Your Reaction?