மாத வழிபாட்டுக்காக சபரிமலையில் இன்று நடை திறப்பு
மாதாந்திர பூஜைக்காக சபரிமலையில் இன்று மாலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் நவக்கிரக பிரதிஷ்டை வழிபாட்டுக்காக கடந்த 11-ம் தேதி மாலையில் நடை திறக்கப்பட்டது.

தேனி: மாதாந்திர பூஜைக்காக சபரிமலையில் இன்று மாலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் நவக்கிரக பிரதிஷ்டை வழிபாட்டுக்காக கடந்த 11-ம் தேதி மாலையில் நடை திறக்கப்பட்டது.
தொடர்ந்து, 12-ம் தேதி பல்வேறு வழிபாடுகள் நடைபெற்றன. கடந்த 13-ம் தேதி நவக்கிரக கோயில் புனர்பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேகம் நடைபெற்று, அன்று இரவு 10 மணிக்கு நடை சாத்தப்பட்டது. இந்நிலையில், மாதாந்திர வழிபாட்டுக்காக இன்று (ஜூலை 16) சபரிமலையில் நடை திறக்கப்பட உள்ளது.
What's Your Reaction?