மழையால் நீர்நிலைகள் நிரம்பட்டும்..! | மார்கழி மகா உற்சவம் 4
கடல் போன்ற கருணை உள்ளம் படைத்த வருண பகவானே! கடலுள் சென்று நீரை முகந்து கொண்டு ஆரவாரத்துடன் ஆகாயத்தில் ஏறி, மழையை வரவைப்பாய். பரந்தாமன் கையில் இருக்கும் சக்கரம் போல மின்னலை ஒளிரச் செய்வாய்.

ஆழி மழைக் கண்ணா! ஒன்று நீ கைகரவேல் | ஆழியுள் புக்கு முகந்துகொ டார்த்தேறி ||
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்துப் | பாழியந் தோளுடைப் பத்மநாபன் கையில் ||
ஆழிபோல் மின்னி, வலம்புரிபோல் நின்றதிர்ந்து | தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல் ||
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும் | மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய் ||
(திருப்பாவை 4)
What's Your Reaction?