மருதமலை அடிவாரத்தில் ஆசியாவின் மிகப்பெரிய முருகன் சிலை; விரைவில் நடவடிக்கை: அமைச்சர் சேகர்பாபு
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் அடிவாரத்தில் ஆசியாவிலேயே மிக உயரமாக 184 அடியில் முருகன் சிலை அமைக்கும் பணிக்கான நடவடிக்கைகள் வெகு விரைவில் மேற்கொள்ளப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் அடிவாரத்தில் ஆசியாவிலேயே மிக உயரமாக 184 அடியில் முருகன் சிலை அமைக்கும் பணிக்கான நடவடிக்கைகள் வெகு விரைவில் மேற்கொள்ளப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு அளித்தப் பேட்டியில், “தமிழக முதல்வர் தலைமையிலான சீர்மிகு ஆட்சியில் திருக்கோயில்களுக்கு குடமுழுக்குகள், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், அன்னதானக் கூடங்கள், தர்ப்பண மண்டபங்கள், பசுமட காப்பகங்கள் என அனைத்து பணிகளுக்கும் முக்கியத்துவம் அளித்து நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
What's Your Reaction?