“மனநலனுக்கு தியானம் மிகச் சிறந்த கருவி” - ஐநாவில் நடந்த முதல் உலக தியான தினத்தில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் உரை

மனநலனுக்கு தியானம் மிகச் சிறந்த கருவி என்றும், தியானம் ஒவ்வொரு வீட்டுக்கும் செல்ல வேண்டும் என்றும் ஐநா தலைமையகத்தில் நடைபெற்ற முதல் உலக தியான தினத்தில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்துள்ளார்.

Dec 21, 2024 - 16:50
 0  3
“மனநலனுக்கு தியானம் மிகச் சிறந்த கருவி” - ஐநாவில் நடந்த முதல் உலக தியான தினத்தில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் உரை

நியூயார்க்: மனநலனுக்கு தியானம் மிகச் சிறந்த கருவி என்றும், தியானம் ஒவ்வொரு வீட்டுக்கும் செல்ல வேண்டும் என்றும் ஐநா தலைமையகத்தில் நடைபெற்ற முதல் உலக தியான தினத்தில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 21-ம் தேதி உலக தியான தினமாக ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்டதை அடுத்து முதல் உலக தியான தினம் இன்று உலகின் பல பகுதிகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. நியூயார்க்கவில் உள்ள ஐநா தலைமையகத்தில் நடைபெற்ற உலக தியான தின கொண்டாட்டத்தின் தொடக்க அமர்வில் வாழும் கலை அமைப்பின் நிறுவனரும், ஆன்மிக குருவுமான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் சிறப்புரை ஆற்றினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow