‘மதி அங்காடி’ மூலம் சுய உதவிக் குழுக்களின் பொருட்கள் ரூ.51 லட்சத்துக்கு விற்பனை: தமிழக அரசு
மகளிர் சுய உதவிக் குழுக்களின் பொருட்கள் கடந்த ஓராண்டில் மட்டும் ‘மதி அனுபவ அங்காடி’மூலம் ரூ.51 லட்சத்துக்கு விற்பனையாகி உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை: மகளிர் சுய உதவிக் குழுக்களின் பொருட்கள் கடந்த ஓராண்டில் மட்டும் ‘மதி அனுபவ அங்காடி’மூலம் ரூ.51 லட்சத்துக்கு விற்பனையாகி உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மகளிர் சுய உதவிக்குழுக்களின் இயற்கை சந்தை போலவே ‘மதி அனுபவ அங்காடி’, சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களை நகர பகுதியில் விற்பனை செய்ய ஏதுவாக தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் முன்னெடுக்கப்பட்டது. அதன்படி கடந்த 2023 நவ.18-ம் தேதி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் ‘மதி அனுபவ அங்காடி’-யை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
What's Your Reaction?