மகத்தான விஞ்ஞானி லூயி பாஸ்டர்
வெறிநாய்க் கடிக்கு மருந்து கண்டறியும் முயற்சியில் இறங்கினார். அதுக்குக் காரணமான கிருமி நாயின் எச்சிலில் இருந்தது. ஆனால் அதிலிருந்துதான் மருந்து எடுக்க முடியும் என நினைத்தார். அதற்காகத் தன் உயிரைப் பொருள்படுத்தாமல் அதன் வாயில் குழாயைச் செருகி எச்சிலை எடுத்தார். மருந்தைக் கண்டறிந்தார். ’ஜோசப் மெய்ஸ்டர்’ என்கிற சிறுவனுக்கு முதலில் ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது. மிகப் பெரிய பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

விஞ்ஞானிகள் - 12
போரில் மடிந்தவர்களைவிட நோயால் இறந்தவர்கள் அதிகம் என்கிறது வரலாறு. மருத்துவர்களும் மருந்து கண்டறிந்தவர்களும் கடவுளுக்கு இணையாக மதிக்கப்படுகிறார்கள். அவர்களில் ஒருவர் லூயி பாஸ்டர். 1822 டிசம்பர் 27இல் பிரான்ஸ் நாட்டில் பிறந்தார். மருத்துவர் அல்ல, ஆனால் வேதியியலாளராகவும் நுண்ணுயிரியலாளராகவும் மருத்துவத் துறைக்கு அவர் செய்த பங்களிப்பு ஏராளம்!
What's Your Reaction?