போரை முடிவுக்கு கொண்டுவர ஆதரவளிக்கும் மோடிக்கு ரஷ்யா, உக்ரைன் நன்றி: ட்ரம்ப் - புதின் முக்கிய பேச்சுவார்த்தை
போரை நிறுத்த தீவிர முயற்சி செய்து வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளனர்.

மாஸ்கோ: உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தொலைபேசியில் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார். உக்ரைன் போர் முடிவுக்கு வருவதற்கான நல் வாய்ப்பு உருவாகியிருக்கிறது.
கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி முதல் ரஷ்யா, உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்த போரை நிறுத்த பிரதமர் நரேந்திர மோடி அதிதீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். கடந்த ஆண்டு ரஷ்யா, உக்ரைனில் தனித்தனியாக அரசு முறை பயணம் மேற்கொண்ட அவர், இரு நாடுகளின் அதிபர்களிடமும் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினார்.
What's Your Reaction?