இந்தியா - ஜப்பான் இடையே மனிதவள பரிமாற்ற செயல் திட்டம்: டோக்கியோவில் பிரதமர் மோடி விவரிப்பு
வலுவான ஜனநாயக நாடுகள் சிறந்த உலகை வடிவமைப்பதில் இயற்கையான பங்காளிகள் என தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, உலகின் அமைதி, நிலைத்தன்மைக்கு இந்திய-ஜப்பான் ஒத்துழைப்பு மிகவும் முக்கியம் என குறிப்பிட்டுள்ளார்.

டோக்கியோ: வலுவான ஜனநாயக நாடுகள் சிறந்த உலகை வடிவமைப்பதில் இயற்கையான பங்காளிகள் என தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, உலகின் அமைதி, நிலைத்தன்மைக்கு இந்திய - ஜப்பான் ஒத்துழைப்பு மிகவும் முக்கியம் என குறிப்பிட்டுள்ளார்.
ஜப்பான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, தலைநகர் டோக்கியோவில் அந்நாட்டு பிரதமர் ஷிகெரு இஷிபாவைச் சந்தித்து இரு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேலும் அதிகரிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
What's Your Reaction?