“பேய் கதை எப்போதும் கைவிடாது” - இயக்குநர் சுப்பிரமணிய சிவா

பேய் கதை நம்மை எப்போதும் கைவிடாது என்று இயக்குநர் சுப்பிரமணிய சிவா பேசும் போது குறிப்பிட்டார்.

Oct 28, 2025 - 22:45
 0  3
“பேய் கதை எப்போதும் கைவிடாது” - இயக்குநர் சுப்பிரமணிய சிவா

பேய் கதை நம்மை எப்போதும் கைவிடாது என்று இயக்குநர் சுப்பிரமணிய சிவா பேசும் போது குறிப்பிட்டார். மனோன்மணி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘தாரணி’. ஆனந்த் இயக்கியுள்ள இப்படத்தில் மாரி, அபர்ணா, விமலா, ஆனந்த், இலக்கியா, இம்ரான், சசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக வெங்கடேஷ் மாவேரிக், இசையமைப்பாளராக காயத்ரி குருநாத் உள்ளிட்டோர் பணிபுரிந்துள்ளனர்.

இதன் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் சுப்பிரமணிய சிவா, கேபிள் சங்கர், இசையமைப்பாளர் தாஜ்நூர் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர். இந்த விழாவில் இயக்குநர் சுப்பிரமணிய சிவா பேசும் போது, “புதியவர்களை அறிமுகப்படுத்துவது தான் இன்றைய சூழலில் சிரமமாக இருக்கிறது. முன்பு பெரிய இயக்குநர்கள் அவர்களை அறிமுகப்படுத்துவார்கள். இன்று அவர்களே பெரிய ஹீரோக்களை தேடிப் போகிறார்கள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow