பூமி எப்படித் தானாகவே சுற்றிக் கொண்டிருக்கிறது? | வானம் நமக்கொரு போதிமரம் 5
நாம் சைக்கிள் ஓட்டும்போது பெடலை அழுத்தி ஆற்றல் தருவதை நிறுத்தினாலும், சிறிது தூரம் அது உருண்டோடும். பின்னர், அதன் வேகம் மெல்லக் குறைந்து நின்றுவிடும். சைக்கிள் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும் என்றால், பெடலை அழுத்தி ஆற்றலை அளித்துக்கொண்டே இருக்க வேண்டும்.

நாம் சைக்கிள் ஓட்டும்போது பெடலை அழுத்தி ஆற்றல் தருவதை நிறுத்தினாலும், சிறிது தூரம் அது உருண்டோடும். பின்னர், அதன் வேகம் மெல்லக் குறைந்து நின்றுவிடும். சைக்கிள் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும் என்றால், பெடலை அழுத்தி ஆற்றலை அளித்துக்கொண்டே இருக்க வேண்டும்.
அதேபோல, ஓர் ஊஞ்சலை இடையிடையே தள்ளித்தான் ஆடவைக்க வேண்டும், அப்போதுதான் அது ஆடிக்கொண்டே இருக்கும். அப்படி என்றால், பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்ளும்போது, அதனைத் தூண்டுவது யார்? எப்படிப் பூமி சுற்றிக்கொண்டே இருக்கிறது? இதற்கான விடையை கலிலியோதான் கண்டறிந்தார்.
What's Your Reaction?