புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம்: 16 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்றது
சென்னை புரசைவாக்கத்தில் உள்ள புகழ்பெற்ற பங்கஜாம்பாள் சமேத கங்காதீஸ்வரர் திருக்கோயிலுக்கு கடைசியாக கடந்த 2008-ம் ஆண்டில் குடமுழுக்கு விழா நடத்தப்பட்டது.

சென்னை: 900 ஆண்டுகள் பழமை வாய்ந்த சென்னை புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோயிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற்றது. சென்னை புரசைவாக்கத்தில் உள்ள புகழ்பெற்ற பங்கஜாம்பாள் சமேத கங்காதீஸ்வரர் திருக்கோயிலுக்கு கடைசியாக கடந்த 2008-ம் ஆண்டில் குடமுழுக்கு விழா நடத்தப்பட்டது.
இந்நிலையில் 900 ஆண்டுகள் பழமை வாய்ந்த கங்காதீஸ்வரர் திருக்கோயிலுக்கு 16 ஆண்டுகளுக்கு பிறகு திருக்குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா நேற்று விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி ரூ.4.82 கோடி மதிப்பீட்டில் கோயிலில் 36 திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
What's Your Reaction?