பாலாடை போன்ற பக்தர்கள் | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் - 1
ஆணாகப் பிறந்தாலும் பெருந்தாய்மையின் திருவுருவாய்த் திகழ்ந்தவர் பெரியாழ்வார். அதனால்தான் எல்லாம் வல்ல திருமால் மீது யாரேனும் கண் வைத்து விடுவார்களோ என்று அவருக்கு பயமாயிருந்தது.

ஆணாகப் பிறந்தாலும் பெருந்தாய்மையின் திருவுருவாய்த் திகழ்ந்தவர் பெரியாழ்வார். அதனால்தான் எல்லாம் வல்ல திருமால் மீது யாரேனும் கண் வைத்து விடுவார்களோ என்று அவருக்கு பயமாயிருந்தது. இந்த பயம் பக்தியின் உச்ச நிலை. ஆனால், பெரியாழ்வாருக்கு இது போதவில்லை. தன்னைப் போலுள்ள ஏனைய பக்தர்களும் திருமாலுக்குப் பல்லாண்டு பாட வேண்டும் என்று அவர் விரும்பினார்.
பகவல்லாபார்த்திகள், கைவல்யார்த்திகள், ஐஸ்வர்யார்த்திகள் என பக்தர்கள் மூன்று வகைப்படுவர். பரமாத்மாவான திருமாலை அனுபவிக்க விரும்புவோர் பகவல்லாபார்த்திகள். சீவாத்மாவை மட்டும் அனுபவிக்க விரும்புவோர் கைவல்யார்த்திகள். உலகியல் இன்பங்களை மட்டும் அனுபவிக்க விரும்புவோர் ஐஸ்வர்யார்த்திகள்.
What's Your Reaction?