உத்தரகாசி மேக வெடிப்பு முதல் புதிய வருமான வரி மசோதா வரை: சேதி தெரியுமா? @ ஆகஸ்ட் 5 - 12
திருத்தப்பட்ட புதிய வருமான வரி மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

ஆக.5: உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் மேக வெடிப்பால் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். 100க்கும் அதிகமானோர் காணாமல் போயினர்.
ஆக.6: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சிக்கனூத்து கிராமத்தில் தந்தை - மகன் இடையே ஏற்பட்ட தகராறை விசாரிக்க சென்ற குடிமங்கலம் சிறப்பு எஸ்.ஐ. சண்முகவேலை தகறாரில் ஈடுபட்ட மகன் வெட்டி படுகொலை செய்தார்.
What's Your Reaction?