பாதயாத்திரை பக்தர்களுக்காக சபரிமலை வழித்தடத்தில் அன்னதான குடில்கள் அதிகரிப்பு
வெளி மாநில ஐயப்ப பக்தர்களின் வருகை உயர்ந்துள்ளதால் சபரிமலை வழித்தடத்தின் வழிநெடுகிலும் அன்னதான குடில்கள் அதிகளவில் அமைக்கப்பட்டு பல்வேறு சேவைகள் செய்யப்பட்டு வருகின்றன

தேனி: வெளி மாநில ஐயப்ப பக்தர்களின் வருகை உயர்ந்துள்ளதால் சபரிமலை வழித்தடத்தின் வழிநெடுகிலும் அன்னதான குடில்கள் அதிகளவில் அமைக்கப்பட்டு பல்வேறு சேவைகள் செய்யப்பட்டு வருகின்றன.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல கால வழிபாடுகள் கடந்த மாதம் 16-ம் தேதியில் இருந்து தொடங்கியது. தற்போது தெலுங்கானா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநில பக்தர்களே அதிகம் தரிசனத்துக்கு வந்து செல்கின்றனர். இவர்களில் பலரும் பாத யாத்திரையாக சபரி மலைக்கு வருபவர்கள். பல வாரங்களாக மாநிலங்களைக் கடந்து திண்டுக்கல், தேனி வழியே சபரிமலைக்குச் சென்று கொண்டிருக்கின்றனர்.
What's Your Reaction?