பாஜகவுக்கு வேதாந்தா வழங்கிய நன்கொடை 4 மடங்காக உயர்வு
மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் வேதாந்தா நிறுவனம் சுரங்க தொழிலில் கோலோச்சி வருகிறது.

புதுடெல்லி: மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் வேதாந்தா நிறுவனம் சுரங்க தொழிலில் கோலோச்சி வருகிறது. அந்த நிறுவனம் சார்பில் கோவா, கர்நாடகா உட்பட பல மாநிலங்கள் மற்றும் லைபீரியா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் சுரங்கங்கள் உள்ளன.
இந்த சூழலில் 2024-25-ம் நிதியாண்டில் பல்வேறு கட்சிகளுக்கு வழங்கிய நன்கொடை விவரங்களை வேதாந்தா நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. இதன்படி அந்த நிறுவனம் சார்பில் பாஜகவுக்கு ரூ.97 கோடி நன்கொடை வழங்கப்பட்டு உள்ளது. அதற்கு முந்தைய ஆண்டு பாஜகவுக்கு ரூ.26 கோடி மட்டுமே நன்கொடையாக வழங்கப்பட்டது.
What's Your Reaction?