பாகிஸ்தான் | குவெட்டா ரயில் நிலைய தற்கொலைப்படை தாக்குதலில் 24 பேர் உயிரிழப்பு; 46 பேர் காயம்
குவெட்டா ரயில் நிலையத்தில் நடந்த தற்கொலைப்படைத் தாக்குதலில் 24 பேர் கொல்லப்பட்டனர். 46 பேர் காயமடைந்துள்ளனர்.

குவெட்டா: குவெட்டா ரயில் நிலையத்தில் நடந்த தற்கொலைப்படைத் தாக்குதலில் 24 பேர் கொல்லப்பட்டனர். 46 பேர் காயமடைந்துள்ளனர்.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாண தலைநகரான குவெட்டாவில் உள்ள ரயில் நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) காலை நிகழ்ந்த தற்கொலைப்படைத் தாக்குதலில் 24 பேர் கொல்லப்பட்டதாகவும், 46 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நகரத்தின் ஆணையர் ஹம்சா ஷஃப்கத் தெரிவித்துள்ளார். மேலும் அவர், இந்த தற்கொலைப்படை தாக்குதலை அடுத்து அனைத்து ரயில் சேவைகளையும் நிறுத்துமாறு ரயில்வே நிர்வாகத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
What's Your Reaction?