பழநியில் எடப்பாடி பக்தர்கள் 15 டன் பஞ்சாமிர்தம் தயாரிப்பு - 365 ஆண்டுகளாக தொடரும் பாரம்பரியம்
பழநியில் எடப்பாடியை சேர்ந்த ஸ்ரீ பருவதராஜகுலம் திருவிழாக்குழு சார்பில் 365-ம் ஆண்டாக பாதயாத்திரை பக்தர்களுக்கு வழங்க 15 டன் பஞ்சாமிர்தம் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

பழநி: பழநியில் எடப்பாடியை சேர்ந்த ஸ்ரீ பருவதராஜகுலம் திருவிழாக்குழு சார்பில் 365-ம் ஆண்டாக பாதயாத்திரை பக்தர்களுக்கு வழங்க 15 டன் பஞ்சாமிர்தம் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உப கோயிலான பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழாவையொட்டி பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரை வந்து முருகனை வழிபட்டு சென்றனர்.
What's Your Reaction?