தஞ்சாவூர் பெரிய கோயிலில் 2 டன் காய்கனி, இனிப்புகளால் நந்தியம்பெருமானுக்கு அலங்காரம்
மாட்டுப் பொங்கலை முன்னிட்டு, தஞ்சாவூர் பெரிய கோயிலில் நந்தியம்பெருமானுக்கு நேற்று 2 டன் காய்கனிகள், இனிப்புகளால் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

மாட்டுப் பொங்கலை முன்னிட்டு, தஞ்சாவூர் பெரிய கோயிலில் நந்தியம்பெருமானுக்கு நேற்று 2 டன் காய்கனிகள், இனிப்புகளால் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
தஞ்சாவூர் பெரிய கோயிலில் பொங்கல் பண்டிகையான நேற்று முன்தினம் மாலை நந்தியம்பெருமானுக்கு பால், தயிர், மஞ்சள் உள்ளிட்ட மங்கலப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, மாட்டுப் பொங்கலான நேற்று பெருவுடையாருக்கும், பெரியநாயகி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
What's Your Reaction?