நெல்லை காந்திமதியம்மன் | ஆடி மாதமும் அம்மன் திருவருளும்
தங்கள் குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு நடப்பது போலவே அன்னையின் திருமண விழா, அதையடுத்து வளைகாப்பு விழா ஆண்டுதோறும் இக்கோயிலில் பக்தர்களால் நடத்தப்படுகிறது.

ஆதிபராசக்தியின் 51 சக்தி பீடங்களில் கமல பீடமாக திருநெல்வேலி காந்திமதியம்மன் கோயில் விளங்குகிறது. திருஞானசம்பந்தரால் தேவாரப்பாடல் பெற்ற தலமான நெல்லையப்பர் கோயிலும், அருகிலேயே காந்திமதியம்மன் கோயிலும் இரட்டைக் கோயில்களாக திருநெல்வேலியில் நடுநாயகமாக அமைந்திருக்கின்றன.
பஞ்ச சபைகளில் இது தாமிர சபை. நெல்லையப்பருக்கு அபிஷேகம் செய்யப்படும்போது லிங்கத்தில் அம்பிகையின் உருவம் தெரிவது ஓர் அற்புத காட்சியாகும்.
What's Your Reaction?