“நெஞ்சை பதற வைக்கிறது பெங்களூரு நெரிசல் சம்பவம்” - கமல்ஹாசன்
ஆர்சிபி அணி ஐபிஎல் கோப்பையை வென்றதற்கான வெற்றிப் பேரணியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவத்துக்கு.நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஆர்சிபி அணி ஐபிஎல் கோப்பையை வென்றதற்கான வெற்றிப் பேரணியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவத்துக்கு.நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட இரங்கல் செய்தியில், “நெஞ்சை பதற வைக்கும் துயர சம்பவம் பெங்களூருவில் நடந்திருக்கிறது. இது மிகுந்த அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயரமான தருணத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும்” என்று தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?