நிறைபுத்தரி பூஜைக்காக சபரிமலை கோயில் நடை இன்று மாலை திறப்பு
நிறைபுத்தரி பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று மாலை நடை திறக்கப்பட உள்ளது. பூஜைக்கான நெற்கதிர்கள் இன்று அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் பம்பைக்கு வர உள்ளது.

தேனி: நிறைபுத்தரி பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று மாலை நடை திறக்கப்பட உள்ளது. பூஜைக்கான நெற்கதிர்கள் இன்று அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் பம்பைக்கு வர உள்ளது.
மலையாள ஆண்டின் முதல் மாதம் சிங்க மாதம் (ஆவணி) ஆகும். இந்த மாதத்தில்தான் கேரளாவின் பெரிய பண்டிகையான ஓணம் கொண்டாடப்படுகிறது. இதற்கு முன்னதாக சபரிமலை உள்ளிட்ட பல கோயில்களில் சுவாமிக்கு நெற்கதிர்களை படைத்து வழிபாடு நடைபெறுவது வழக்கம். இது நிறைபுத்தரி (நிறையும் புது அரிசி) என அழைக்கப்படுகிறது.
What's Your Reaction?