நினைத்ததை நிறைவேற்றும் அகரம் பாலமுருகன் | ஞாயிறு தரிசனம்
ஒருநாள் ராயக்கோட்டையிலிருந்து ஓசூருக்கு உபன்யாசம் செய்ய முருக பக்தர் சென்று கொண்டிருந்தார்

மூலவர்: பாலமுருகன் உற்சவர்: சுப்பிரமணியர் தலவரலாறு: பல வருடங்களுக்கு முன்பு ஒருநாள் ராயக்கோட்டையிலிருந்து ஓசூருக்கு உபன்யாசம் செய்ய முருக பக்தர் சென்று கொண்டிருந்தார். வழியில் அகரம் கிராமத்தில் அவரை சர்ப்பம் வழிமறித்தது. தனக்கு வழிவிடுமாறு பக்தர் கேட்டதும், நாகம் நகரத் தொடங்கியது. அது தம்மை எங்கோ அழைத்துச் செல்ல முற்படுகிறது என்பதை உணர்ந்து. நாகத்தைப் பின்தொடர்ந்தார். அது புதர் மண்டிக்கிடந்த இடத்தில் புற்று அருகில் சென்றதும் திடீரென மறைந்து போனது. பின்னர் அந்த இடத்தை ஆராய்ந்து பார்த்தபோது, அங்கு மண்டபம், திருக்குளத்துடன் கோயில் இருந்ததற்கான அடையாளம் தென்பட்டது.
இப்பகுதியில் அன்னியர் படையெடுப்பின்போது பல கோயில்கள் அழிக்கப்பட்டதாகவும் அதில் இந்த கோயிலும் ஒன்று என்பதும் பின்னர் தெரியவந்தது. ஆறுமுகனுக்கு கோயில் கட்ட வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்த பக்தர், அந்த இடத்தை சீர்படுத்தி, பாலமுருகன் சிலையை பிரதிஷ்டை செய்தார். தினசரி பூஜைகளையும் மேற்கொண்டார். தற்போது பழைய கோயிலுக்கு அருகில் புதிய கோயில் கட்டப்பட்டுள்ளது.
What's Your Reaction?